சில vitamin குறைபாடுகளுக்காக நம் ஸம்ப்ரதாயத்தவர் சிலர் மஷ்ரூம், பூண்டு போன்ற நிஷித்த வஸ்துக்களை எடுத்துக்கொள்ள நேர்கிறது. இக்காய்களைத் தவிர்த்து நம் vitamin குறைபாடுகளை நீக்க வழி இருக்கிறதா?

இந்த நிஷித்தமான பதார்த்தங்களைக் கொண்டுதான் ஆரோக்யத்தை வளர்க்க வேண்டும் என்று இல்லை. புராதன காலத்தில், நம் பெரியோர்கள் எல்லாம் எந்த ஒரு நிஷித்த பதார்த்தங்களையும் சாப்பிடாமல் தீர்காயுஸாக, ஆரோக்யமாக இருந்திருக்கின்றனர். அதனால் அதெல்லாம் தேவை, அது இருந்தால்தான் இந்த வைட்டமின் குறைபாடெல்லாம் இல்லாமல் இருக்கும் என்பது கிடையாது. இதை முதலில் நம்பவேண்டும்.
ஶாஸ்த்ரத்தில் விதித்த காய்கறிகளை, விதித்த முறையில் எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்திவிட்டு சாப்பிட்டாலே எந்த விதமான குறைபாடும் ஏற்படாது. ஆகார நியமத்தில் சொல்லப்பட்ட காய்கறிகளைச் சேர்த்துக்கொண்டாலேயே எந்த விதமான வைட்டமின் பற்றாக்குறையும் இல்லாமல் வாழலாம். இது நிச்சயம். இதை சேர்த்துக் கொண்டால்தான் இந்தக் குறைபாடு நீங்கும் என்பதெல்லாம் புதிது புதிதாக தற்காலத்தில் அவரவர்கள் ஏற்படுத்தியதுதான். அதனால் அது உண்மை என்று நம்ப வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top