டிவி போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதைத் தவிர்த்திருக்க்கிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்வதில் ஐயம் வேண்டாம். அதை பெருமையாகவே கருதலாம். ஏனென்றால் ஆதுனிக காலத்தில் சத்விஷயத்தில் பொழுதைப் போக்க நினைக்காதவர்கள் கூட அனாவசியமாக காலைப்பொழுது போக்கை இந்த மீடியாவில் செலவழிக்க வேண்டாம் என்று நினைக்கின்ற ஒரு மனப்பான்மை இருக்குகின்றது. அதனால் எனக்கு இது பிடிக்கவில்லை , இதில் நான் நேரத்தை செலவழித்து வீணாக்க விரும்பவில்லை என்று சொன்னால் தப்பாக எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்க வேண்டாம். அப்படி அவர்கள் தப்பாக எடுத்துக் கொண்டாலும் அதை பற்றி கவலைப் படவேண்டாம்.அவரிடத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதை நான் தவிர்க்கிறேன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். இது நல்லதல்ல. நல்லதல்லாததை தவிர்ப்பதை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லலாம், பாதகமில்லை. அவர்களுக்கு சத்புத்தி ஏற்பட்டு அவர்களும் சம்பிரதாயத்தில் ஈடுபடவேண்டும் என்று எம்பெருமானிடத்தில் ஶ்ரத்தையாக ப்ரார்த்தித்துக்கொள்ளலாம். எம்பெருமான் சீக்ரம் அந்த மனோரதத்தையும் நிறைவேற்றுவான்.