முன்பெல்லாம் டிவி போன்ற கேளிக்கை விஷயங்களில் ஈடுப்பட்டு வந்தேன் ஆனால் ப்ரந்யாஸம் செய்தபின் காலத்தைக் கழிக்க சரியான வழி என்ற புரிதலால் அவையெல்லாவற்றையும் அறவே தவிர்த்து விட்டேன். ஆனால் அகத்தில் இருக்கும் பெரியவர்களோ, சொந்தங்களோ கேளிக்கைப் பற்றியே பேசுகிறார்கள். அவர்கள் அப்படிப் பேச நேரும்போது ஏதோ ஒரு பொய்ச்சொல்லி தவிர்க்கின்றேன்.இப்படிச் செய்வதால் பாகவத அபசாரம் ஏற்படுமா? அவர்களிடம் அபசாரப் படாமல் இக்கேளிக்கைப் பேச்சிலிருந்து மெல்ல விலகுவது எப்படி? அகத்தின் வேலைகளை முடித்துவிட்டு எம்பெருமான் விஷயமான உபந்யாஸங்கள், 108 திவ்ய தேச வைபவம், காலக்ஷேபம் போன்றவற்றில் ஈடுபடுவதையும், பேசுவதையுமே மிகவும் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் இச்சிறிய வயதில் இவ்விஷயங்களில் அடியேன் ஈடுபடுவதை விரும்பவில்லை. அவர்களிடம் எப்படி எடுத்துரைப்பது? சில நேரம் அவர்கள் இப்படிச் சொல்வது எனக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.

டிவி போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதைத் தவிர்த்திருக்க்கிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்வதில் ஐயம் வேண்டாம். அதை பெருமையாகவே கருதலாம். ஏனென்றால் ஆதுனிக காலத்தில் சத்விஷயத்தில் பொழுதைப் போக்க நினைக்காதவர்கள் கூட அனாவசியமாக காலைப்பொழுது போக்கை இந்த மீடியாவில் செலவழிக்க வேண்டாம் என்று நினைக்கின்ற ஒரு மனப்பான்மை இருக்குகின்றது. அதனால் எனக்கு இது பிடிக்கவில்லை , இதில் நான் நேரத்தை செலவழித்து வீணாக்க விரும்பவில்லை என்று சொன்னால் தப்பாக எடுத்துக்கொள்வார்கள் என்று நினைக்க வேண்டாம். அப்படி அவர்கள் தப்பாக எடுத்துக் கொண்டாலும் அதை பற்றி கவலைப் படவேண்டாம்.அவரிடத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதை நான் தவிர்க்கிறேன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். இது நல்லதல்ல. நல்லதல்லாததை தவிர்ப்பதை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்லலாம், பாதகமில்லை. அவர்களுக்கு சத்புத்தி ஏற்பட்டு அவர்களும் சம்பிரதாயத்தில் ஈடுபடவேண்டும் என்று எம்பெருமானிடத்தில் ஶ்ரத்தையாக ப்ரார்த்தித்துக்கொள்ளலாம். எம்பெருமான் சீக்ரம் அந்த மனோரதத்தையும் நிறைவேற்றுவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top