காம க்ரோதங்ளை வெல்வதற்கு மனதை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும். மனதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாயிற்று என்று அர்ஜுனன் கேள்வி கேட்டதற்கு கிருஷ்ணன் கஷ்டமே, அப்யாசத்தினாலும் வைராக்கியத்தினாலும் அதைச் சாதிக்க முடியும் என்ற பதில் கூறியிருக்கிறார். அதனால் முயற்சித்துக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.
பெருமாளிடத்தில் நாம் ஈடுபாட்டை அதிகரித்து கொள்ளவேண்டும். அதாவது பெருமாள் கைங்கர்யம், காலக்ஷேபம், அனுஷ்டானம் போன்றவற்றில் ஈடுபடவேண்டும். இப்படி இது அதிகரிக்க அதிகரிக்க வெளி விஷயங்களில் உள்ள காம க்ரோதங்கள் குறையும். இதை ஸ்ரீமத் பகவத்கீதையில் கண்ணனே சொல்லியிருக்கிறான்.