எந்த ஒரு தாயாரும் என்ன ஒரு அபசாரப்பட்டாலும் கூட தன்னுடைய குழந்தை கஷ்டப்படட்டும், கெட்டுப் போக வேண்டும் என்று நினைக்கவே மாட்டாள். அதனால் பண்ணிய அபச்சாரங்களுக்கு அவர் இருக்கும் பொழுதே ப்ரார்த்தனை பண்ணிக் கொண்டிருக்கலாம். இப்பொழுது பண்ணவேண்டும் என்றால் சர்வ லோக மாதாவான தாயாருடைய சன்னதிக்குச் சென்று தான் பண்ணிய அபசாரங்களை ஸ்வயமே விஞ்ஞாபித்துக் கொண்டு சேவித்து அபராத க்ஷமாபணம் பண்ணிக் கொள்ளலாம்.