அடியேனின் தாயார் 44ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் மூலம் பரஸமர்ப்பணம் செய்தவர். அவர் சில நாட்கள் முன்பு ஆசார்யன் திருவடி அடைந்துவிட்டார். அடியேன் ப்ரக்ருதம் ஸ்ரீமத் அழகியசிங்கரிடம் பரந்யாஸம் பெற்றுள்ளேன். அடியேனின் வருத்தம் மற்றும் கேள்வியானது, என் தாயாரிடம் தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த அபசாரங்களுக்கு என்ன ப்ராயஶ்சித்தம் செய்ய வேண்டும்? அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன். அவர்களுக்குக் கட்டாயம் பித்ரு கார்யங்களைச் சரியாக செய்வேன்.

எந்த ஒரு தாயாரும் என்ன ஒரு அபசாரப்பட்டாலும் கூட தன்னுடைய குழந்தை கஷ்டப்படட்டும், கெட்டுப் போக வேண்டும் என்று நினைக்கவே மாட்டாள். அதனால் பண்ணிய அபச்சாரங்களுக்கு அவர்‌ இருக்கும் பொழுதே ப்ரார்த்தனை பண்ணிக் கொண்டிருக்கலாம். இப்பொழுது பண்ணவேண்டும் என்றால் சர்வ லோக மாதாவான தாயாருடைய சன்னதிக்குச் சென்று தான் பண்ணிய அபசாரங்களை ஸ்வயமே விஞ்ஞாபித்துக் கொண்டு சேவித்து அபராத க்ஷமாபணம் பண்ணிக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top