தனுர் மாதத்தில் மாத்திரமே சூர்யோதயத்திற்கு முன்பு திருவாராதனம் செய்ய வேண்டும். மற்ற மாதங்களில் க்ரஹண காலமாகயிருந்தால் திருவாராதனம் செய்யலாம். ஏனைய சமயங்களில் சூர்யோதயம் ஆகும் நேரம் சந்தியாவந்தனங்களைச் செய்துவிட்டுதான் திருவாராதனம் செய்யும் வழக்கம். ஒருவேளை வெளியே செல்லவேண்டுமானால் சூர்யோதயத்திற்கு முன் அர்க்யம் விட்டு உதயத்திற்கு உபஸ்தானம் பண்ணி, அதற்குப்பின் வேண்டுமானால் மாத்யானிகம் பண்ணி உடனே திருவாராதனம் பண்ணலாம். ரொம்ப அல்ப துவாதசியாக இருந்ததானால் சூர்யோதயத்திற்கு முன் திருவாராதனம் பண்ணலாம்.

