தென்கலை வடகலை ஸம்ப்ரதாயத்தில் எத்தனையோ அபிப்ராய பேதங்கள் உண்டு. ஆசார அனுஷ்டான பேதங்கள், சித்தாந்த பேதங்கள் என்றெல்லாம் உண்டு, ஆகையாலே அவரவர் அவரவருடைய ஆசார்ய தனியனைச் சொன்னாலே போதும். சில கால விசேஷத்தில் மற்றொரு தனியனைச் சொன்னால் தவறொன்றுமில்லை.
குறிப்புகள்:
எந்த ஒரு தனியனுக்கும் அந்தத் தனியனின் சொல்லப்படுகின்ற ஆசார்யனால் தான் ஏற்றம். யார் அந்தத் தனியனை எழுதினார், சொன்னார் என்பதில் ஏற்றம் இல்லை. அதனால் அவரவர்களுடய ஆசார்யன் தனியனைச் சேவிப்பதுதான் உத்தமமான கார்யம். நாம் தேஶிக ஸம்ப்ரதாயஸ்தர்கள், அதனால் தேஶிகன் தனியனைச் சேவித்தால் மட்டும் போதும்.