பொதுவாக திருமணத்திற்குப் பிறகு ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணம் செய்வது வழக்கில் இருக்கிறது, ஆனால் திருமணத்திற்கு முன்பே ஆசையிருந்தால் ஒரு ஸ்த்ரீ ப்ரந்யாஸம் பண்ணிக்கொள்ளலாமா. மேலும், அப்படி பரந்யாஸம் செய்வித்த ஆசார்யனும் வரப்போகும் மாப்பிள்ளை வீட்டாரின் ஆசார்ய சம்பந்தமும் வெவ்வேறாக இருந்தால் செய்த பரந்யாஸம் பலிக்குமா/ஒத்துக்கொள்ளப்படுமா? அடியேனின் அறியாமைகயை க்ஷமிக்கவும்.

திருமணத்திற்குப் பிறகு ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணம் செய்துகொள்ளலாம். திருமணத்திற்கு முன்பே தாராளமாக பரந்யாஸம் பண்ணிக்கொள்ளலாம். திருமணத்திற்குப் பின் ஆசார்ய சம்பந்தம் வேறுபாட்டால் பரவாயில்லை. பரந்யாஸம் பலிக்கும். அதை ஒத்துக்கொள்வார்கள். சாஸ்த்ரம் இல்லை என்பது கிடையாது. திருமணத்திற்கு முன் செய்து கொள்வதில் தவறொன்றும் இல்லை.
பொதுவாக ஒரு பெண்ணிற்குத் திருமணத்திற்குப் பின் அவர்களுடைய ஆசார்ய சம்பந்தம் இருந்தால் நல்லது என்கின்றபடியினாலும், பர்தாவினுடைய ஆசார்யன் பெண்ணிற்கும் இருக்கட்டும் என்பதற்காகவும், வேறு வேறு ஆசார்ய சம்பந்தம் வேண்டாம் என்பதற்காகவும், சங்கடத்தைத் தவிர்ப்பதற்காகவும், நம் வழக்கத்தில் திருமணத்திற்கு முன் பரந்யாஸம் பண்ணிக்கொள்வதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top