ஆக்ஞா கைங்கர்யம் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும். ஆக்ஞா கைங்கர்யத்திற்கும், மோக்ஷம் அடைவதற்கும் பெரிய சம்பந்தம் ஒன்றும் கிடையாது. ஏனென்றால் ஶரணாகதி செய்து கொண்டால் நமக்கு மோக்ஷம் கிடைக்கும். ஆனால் ஆக்ஞா கைங்கர்யம் அனுஷ்டிக்கவிட்டால் பாபம் என்று சொல்லியிருக்கிறது. அந்தப் பாபத்தினுடைய தண்டனைகளை அனுபவிக்க வேண்டி வரும். அதனால் அதனைக் கட்டாயம் அனுஷ்டிக்க வேண்டும்.
பகவத் கீதையில் கிருஷ்ணன் சொன்ன கர்மயோகமும் ஆக்ஞா கைங்கர்யமம் ஒன்று இல்லை. இவை இரண்டும் வெவ்வேறு. கர்மயோகமாக இருக்கட்டும், ஞானயோகமாக இருக்கட்டும், பக்தியோகமாக இருக்கட்டும் எல்லாவற்றிற்கும் ஆக்ஞா கைங்கர்யம் தனியாக பண்ண வேண்டும். அதாவது நித்யகர்மாநுஷ்டானங்கள் ஆக்ஞா கைங்கர்யம் என்று வைத்து கொள்ளலாம் அது தனியாக கட்டாயம் பண்ணி ஆக வேண்டும்.