அடியேன் இருப்பது ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு. இங்கு ஒரு விநாயகர் கோவில் உருவாக்க குடியிருப்பு வாசிகள் முடிவு எடுத்துள்ளார்கள். அதற்கு எல்லா உரிமையாளர்களும் உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். எங்கள் ஆத்தில் அனைவருக்கும் பரஸமர்ப்பணம் ஆகி விட்டது. பிற கோவில்களுக்கு போவதில்லை. ஆனால் இந்தப் பணிக்கு உதவ வேண்டிய நிர்ப்பந்தம். மறுக்க முடியாது. நிர்மாணம் ஆன பிறகு வேறு எதுவும் செய்ய முடியாது வேண்டியதும் இல்லை.இது குறித்து அறிவுரை வழங்க வேண்டுகிறேன்.

விநாயகர் கோவிலுக்கு நாம் உதவி செய்யலாமா என்று கேட்டால், ஶாஸ்த்ரப்படி செய்யக்கூடாது. நீங்கள் கேள்வியில் குறிப்பிட்டிருப்பது போல் சில சங்கடங்கள் இருக்கின்றன. அதனால் நாம் நமது ஸ்ரீவைஷ்ணவத்துவத்தை குறைத்துக் கொள்ளாமல் , நீங்கள் சொல்லியிருப்பிப்பது போல் உறுதியான எண்ணம் இருக்கின்றபடியினால், அது நமக்கு பாதகமாக இருக்காது என்று தோன்றுகிறது.
பைசாவுடன் போய்விடட்டும் என்று சொல்லி அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிடலாம். ஶாஸ்த்ரம் இல்லை. வேறு வழி இல்லாமல் கொடுக்கின்றோம். எத்தனையோ கொடுக்கின்றோம். கேபிள் டிவி போன்று தேவையில்லாததற்கு எத்தனையோ செலவு செய்கின்றோம். அந்த மாதிரியாக இதை நினைத்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top