சந்தியாவந்தனம் செய்ய முடியாதவர்களுக்கான நித்யகர்மங்களில் குறிப்பாக பகவான் நாமம் சொல்வது மிகவும் விசேஷம் என்று இருக்கிறது.
அதில் ஒரு முக்கியமான விஷயம் சந்தியாவந்தனம் செய்ய முடியாதவர்கள் நம்மால் செய்ய முடியவில்லையே என்று நினைத்து கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் ஶாஸ்த்ரத்தில் துல்ய பலம் என்று ஒன்று சொல்வார்கள், அதாவது அந்தந்த அதிகாரிகள் அவர்களுக்கு விதித்ததைச் செய்ய வேண்டும்.
அதைச் செய்யும் அதிகாரம் இல்லாவிட்டால் கூட பலனில் எந்தக் குறைவும் கிடையாது, பெருமையிலும் எந்தக் குறைவும் கிடையாது. உதாரணமாக புருஷர்கள் செய்கின்ற அனுஷ்டானங்களை ஸ்த்ரீகள் செய்ய மாட்டார்கள். கோவில்களில் அர்ச்சகர்கள் செய்கின்ற கைங்கர்யத்தை, பர்ஜாரகர்கள் செய்ய மாட்டார்கள். அவரவர்களுக்கு விதித்த அனுஷ்டானத்தை அவரவர்கள் செய்வதே விசேஷம். அதனால் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். பாபங்களைப் போக்கிக்கொள்ள நாமகீர்த்தனம், பெருமாளைச் சேவித்தல் முதலிய எத்தனையோ வழிகள் இருக்கின்றன.