ஸ்ரீராமநவமியன்று ஏகாதசி போல் அனுஷ்டித்து, அடுத்தநாள் துவாதசி தளிகை பண்ணுவது என இரண்டு ஸம்ப்ரதாயம் இருக்கிறது.
முனித்ரய ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீராமநவமியன்று ஏகாதசி போல் வ்ரதம் இருந்து மறுநாள் துவாதசி போல் பாரணை பண்ண வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. ஸ்ரீராமநவமியன்று வ்ரதம் அனுஷ்டிக்கின்றபடியால் சாதம் ஸமர்பிக்க முடியாது. ஆகையால் அன்று பெருமாள் திருவாரதனத்திற்கு, ஆத்தில் வ்ரதத்திற்கு என்ன சாப்பிடுவேமோ (பழங்கள் போன்றவை) அதை ஸமர்பிக்கலாம். மேலும், அன்று விசேஷமாக ஸ்ரீராமநவமிக்கு வடபருப்பு, பானகம் ஸமர்பிக்கும் வழக்கம் உண்டு. மறுநாள் துவாதசி போல் பாரணை தளிகை, அதில் பருப்பு திருக்கண்ணமுது என விசேஷமாக பண்ணி பெருமாளுக்கு அம்சை பண்ண வேண்டும்.
ஸ்ரீ ஸந்நிதி (அஹோபில மடம்) ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீராமநவமியன்றே பாரணை என்பது வழக்கம். அதாவது பெருமாள் திருவாராதனை எல்லாம் முடித்த பின்பு, மத்யானத்தில் பாரணை. ஆகையால் ஸ்ரீராமநவமியன்றே பாரணை போல் தளிகை பண்ணி, பருப்பு திருக்கண்ணமுது, வடபருப்பு, பானகம் என எல்லாம் விசேஷமாக ஸமர்பிக்க வேண்டும்.