பண்டிகை, ஶ்ரார்த்தம் போன்ற நாட்களில் சுமங்கலி ஸ்த்ரீகள் குங்குமத்தினால் திலகம் இட்டுக்கொள்ள வேண்டுமா, ஸ்ரீசூர்ணத்தில் இட்டுக்கொள்ள வேண்டுமா, நெற்றிவகுடு துவக்கத்தில் குங்குமம் இட்டு கொள்வது ஸம்ப்ரதாயபடிச் செய்யலாமா.

பண்டிகை, ஶ்ராத்தம் போன்ற நாட்களில் சுமங்கலிகள் திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ளவது உத்தமம். அந்த ஸ்ரீசூர்ணம் என்பது பொதுவாக சிகப்பு ஸ்ரீசூர்ணமாக இருக்கும். குங்குமத்தைக் குழைத்து இட்டுக்கொள்வதும் சிலர் வழக்கத்தில் உள்ளது.
திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ளவது என்பது என்றைக்கு ஸமாஶ்ரயணம் ஆகின்றதோ அன்றைக்கு புண்ட்ர சம்ஸ்காரம் பண்ணும்பொழுது ஆசார்யாள் மஞ்சள் ஸ்ரீசூர்ணத்தையே இட்டு விடுவார்கள், அது அன்றைக்கு மட்டுமே என்று சொல்வார்கள். அதற்கு மேல் சிகப்பு ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ள சொல்வது வழக்கம்.
அதையே ஸ்த்ரீகள் கடைபிடிக்கலாம். சிகப்பு ஸ்ரீசூர்ணமோ அல்லது குங்குமமோ தினமும் இட்டுக்கொள்ளலாம்.
பண்டிகை, ஶ்ராத்தம் நாட்களில் அவசியம் இட்டுக்கொள்ள வேண்டும்.
அதே போல் வகிட்டில் துவக்கத்தில் குங்குமம் வைத்து கொள்ளவது தவறு கிடையாது. ஶாஸ்த்ரப்படி அதில் ஒன்றும் விரோதமில்லை. நேரடியாக வகிட்டு வரை ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டுவிட்டால் அந்தக் கவலையே கிடையாது. அப்படி ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ளாமல் திலகம், பொட்டு வைத்துக்கொள்ளும் பக்ஷத்தில் வகிட்டில் குங்குமம் இட்டுக்கொல்வது வழக்கத்தில் இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top