a) குடும்பத்தில் யாரேனும் இறந்து விட்டால் எந்தத் தலைமுறை வரை ஒரு வருடம் பண்டிகைகள் கொண்டாடக் கூடாது ? b) எந்தப் பண்டிகைகள் கொண்டாடலாம்? ஸங்க்ரமணம், ராமநவமி, நவராத்ரி, விஜயதசமி, ஸ்ரீஜயந்தி, ஆழ்வார் ஆசார்யன் திருநக்ஷத்ரங்கள் இவற்றைக் கொண்டாடலாமா? c) நரக சதுர்த்தசி அன்று கங்கா ஸ்நாநம் செய்யலாமா ? d) நவராத்ரி சமயத்தில் கொலு வைக்கலாமா ?

a.நமக்கு நெருக்கமானவர்கள் என்பவர் குறைந்தபக்ஷம் மூன்று தலைமுறைவரை வரும். அவர்கள் ஒருவருடம் வரை பண்டிகைகள் கொண்டாட மாட்டார்கள். அதற்குப்பிறகு இருப்பவர்கள் அவரவர் மனநிலை பொறுத்தது.
b.ஸங்க்ரமணம், ராமநவமி, போன்ற கேள்வியில் குறிப்பிடப்பட்ட எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடலாம்.
c.கங்கா ஸ்நானம் செய்யலாம்.
d.நவராத்ரி சமயம் கொலு வைப்பார்கள். b முதல் d வரை மூன்று தலைமுறையில் வராதவர்கள் பொதுவாக அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடுவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top