அமாவாஸை தளிகை அகத்தில் எல்லோருமே உட்கொள்ளலாம். இரவு வேளையில் தர்ப்பணம் பண்ணுபவர்களுக்குப் பலகாரம். சில அகங்களில் தர்ப்பணம் பண்ணாதவர்கள் வெறும் பலகாரம் பண்ணக்கூடாது, கொஞ்சம் சாதமும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்ற வழக்கம் வைத்துக் கொண்டுள்ளார்கள். சில அகங்களில் எல்லோருமே பலகாரம் பண்ணலாம் என்றும் வழக்கும் வைத்துக்கொண்டுள்ளார்கள். அவரவர் அகத்து வழக்கப்படிச் செய்யவும்.

