1)திருவாராதனம் நின்றுகொண்டா, அமர்ந்து கொண்டா எப்படிப் பண்ணவேண்டும்? எது சரி? 2) ப்ரபந்நன் செய்த பாபங்கள் ஆசார்யனிடம் போகுமா? 3) திருவாராதனத்தில் எப்போது எந்த ஆசனத்தில் ஶ்லோகங்கள், ப்ரபந்தங்களைச் சேவிக்க வேண்டும்? 4)அனைத்து ஆசனம் போதும் ஷோடஸ உபசாரம் செய்யவேண்டுமா? அல்லது சர்வோபசாரம் ஸமர்ப்பயாமி என்று செய்தால் போதுமா? 5) திருவாராதனம் செய்த பின் சேவிக்கும் போது என்ன சொல்லவேண்டும்?

1.திருவாராதனம், பூத சுத்தி, மானஸ ஆராதனம் வரை உட்கார்ந்து கொண்டும் பிறகு நின்று கொண்டும் பண்ணும் வழக்கம்.
2.“சிஷ்ய பாபம் குரோரபி” என்ற வசனத்திற்கான விஷயம் வேறு. அதாவது சிஷ்யனை திருத்தாமல் இருந்தால் அப்போது அந்த பாபம் போகும். ப்ரபந்நன் செய்த பாபங்கள் ஆசார்யரிடம் போகாது. ஆனால் ஒரு ஆசார்யன் சிஷ்யனை திருத்தவேண்டிய சமயத்தில் திருத்தாமல் விட்டால் அப்போது அவருக்குத் தோஷம் போகும்.
3.திருவாராதனத்தில் அலங்கார ஆசனம், பிறகு சாற்றுமுறை சமயம் ஶ்லோகங்கள், பாசுரங்களைச் சேவிப்பார்கள். அதை மந்திராசனத்தில் சிலர் பண்ணுகிறார்கள், சிலர் பர்யங்காசனத்திலே பண்ணுகிறார்கள். பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.
4.எந்தெந்த ஆசனத்தில் என்னென்ன உபசாரம் என்பது திருவாராதன ப்ரக்ரீயையில் இருக்கிறது. அதன்படி செய்யவும்.
5. இதுவும் ஆராதன ப்ரக்ரீயையில் இருக்கிறது. சேவிக்கும் போது அபராதக்ஷமாபனங்களெல்லாம் பண்ணவேண்டும். மறுபடியும் திருவாராதனத்திற்குப் பெருமாள் ஏளி அனுக்ரஹிக்கணும் என்பதும், விஸ்வக்ஷேனரிடம் அனுமதி வாங்கிக்கொள்ளவேண்டும் என்பதும் அதிலே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top